Nov 022021
 

குருப் பெயர்ச்சி பலன்கள் – நவம்பர் 2021-22- கடக ராசி:

கடக ராசி :

இந்த வருடம் நவம்பர் மாதம் 21-ம் தேதியன்று குருப்பெயர்ச்சி நிகழும்போது குரு உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், குரு அஷ்டம குருவாகிறார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள்.
சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக அவமானங்களையும் , மனக் கவலையும் சூழ்ந்தபடியே இருப்பர். உங்களுக்கு நிதிநிலைமை நன்றாகவே இருந்தாலும்கூட உங்கள் பணம் எதிலாவது முடங்கிப்போவதால், பணப் பிரச்சினை உங்களை வாட்டத்தான் செய்யும். கடன்காரர்களும் லேசில் விடமாட்டார்கள். கன் தொல்லை உங்களை நாண்யமற்றவர் என்று காட்டும். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள் உங்களை வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கையில் பணப் புழக்கம் சரியாக இல்லாததால், குடும்பத்தினரின் அவசியத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் போவதால் குடும்பத்தினரின்மனக் கசப்புக்கு ஆளாக நேரும். பிள்ளைகளின் படிப்புக்குக்கூட இடைஞ்சல் வரும். அவர்கள் விரும்பிய கோர்ஸில் சேர்த்துவிட முடியாமல் போகும். குடும்ப அமைதியும் கெடும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்களுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம்.
பொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவ்ர் விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர்களாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம், மற்றும் கண்கலளிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.
குரு அஷ்டமத்தில் சஞ்சரிக்கும்போது, உங்களுக்கு ‘குருபலம்’ இருக்காது. எனவே திருமணங்கள் தட்டிப் போகும். அல்லது தள்ளிப்போகும். கையில் போதிய அளவு பணம் இல்லாத காரணத்தாலும், திருமணம் செய்ய முடியாமல் போகும். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு கடுமையாகி பிரியும் நிலைகூட உருவாகும். வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம். பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டி பணத்தை கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நிங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாம்ல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடியும். எனவே சமானப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும. அதை விட்டுவிட்டு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், சணடைதான் வரும்.
உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நீங்கள் பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உங்களிடம் உதவி பெற்றுவரும் நண்பர்களும் உறவினர்களும்,இப்போது உங்களுக்கு உதவ முடியாமல் போகும். அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களைவிட்டு விலகிப் போவார்கள். கூட்டு வியாபாரமும் சிறக்க முடியாது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகலாம். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். வரவேண்டிய பணிஉயர்வுகள் தாமதப்படலாம். வீடு வாகனங்கள் விரயச் செலவைக் கொடுக்கும். உங்கள் மதிப்பும் புகழும் குறையக்கூடும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்காமல் போகும்.
தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு முதலியவற்றில் சில தடைக்ள் ஏற்படலாம். இந்த காலம் முடிந்த நீங்கும். குலதெய்வ வழிபாட்டில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் சிலருக்கு வில்லங்க விரயங்கள் ஏற்ப்டலாம். உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கைகொடுக்க முடியாமல் போகும்.
குரு பார்வை பலன்கள்:
எங்கேயிருந்த போதிலும் குருபகவானுடைய பார்வைகளுக்கு சுபத் தன்மைகள் உண்டு. செப்டம்பர்11 முதல் அஷ்டமஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது குருபகவானுடைய மூன்று அருட்பார்வைகளில், ஒரு பார்வை உங்கள் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், செலவுகள் அதிகமாகும். அதிகப்படியாகப் பணத்தைப் புரட்டி சுப சௌகரிய செலவுகளையும் செய்துகொள்ளமுடியும். மேலும், சிலருக்கு வெளிநாட்டுப் பயணங்களையும் தூண்டும். அதனால் பணத்தையும் கரைக்கும். குருபகவானின் இன்னொரு பார்வை தன் குடும்ப வாக்கு ஸ்தானத்தில் வீசுகிறது. இதனால், பேரமும் பேச்சுவார்த்தைகளும் சாதகமாகும். செல்வாக்கையும் சொல்வாக்கையும் கொண்டு நிலமையை சமாளித்துக்கொள்ள முடியும். அப்படி இப்படி பணம் புரட்டிக்கொண்டு வந்து குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உதவிக்கொண்டிருக்கும். குடும்பம் நல்லபடியாக நடக்கும். என்னதான் அடிப்படை வருமானம் நன்றாக இருந்தாலும் அடிக்கடி உண்டாகும் பணத் தட்டுப்பாடுகள், கொடுக்கல் வாங்கல் குளறுபடிகள், இடக்கு முடக்கான பேச்சுவார்த்தைகள் குடும்பக் குறைபாடுகள் என்றிருப்பவை எல்லாம் இந்தக் குரு பார்வையால், குறையும்; கட்டுப்படும்;விலகும். குடும்ப அமைப்புக்கும் சுபிட்சத்துக்கும் இந்தக் குரு பார்வையால் பாதுகாப்பு உண்டு. குருபகவானின் மற்றொரு சுபப் பார்வை உங்கள் ராசிக்கு மாத்ரு, சுக ,வித்யாபந்து மித்ர ,சொத்து ஸ்தானத்தின்மீது பதிகிறது. தாயாருக்கு நோய்நொடிகள் தணிந்து குணமாகும். படிப்பும் பயிற்சியும் தீவிரமடையும். சொந்தம், பந்தம், சிநேகிதம் ஆகியவற்றில் இருந்துவந்த கசப்பான நிலைமை மாறும். வீட்டுவசதி அதிகப்படும். பண முடக்கம் நெருக்கடி நிலைமை இருந்தாலும், சொத்து பத்து வசதிகளைத் திருத்திக்கொள்ளவோ அபைவிருத்தி செய்துகொள்ளவோ இந்தக் குரு பார்வை ஒத்துழைக்கும்.

குருவின் வக்கிர சஞ்சாரம்:
.
குருவின் வக்கிர சஞ்சாரம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். தொழிலில் பார்ட்னர்களால் சகாயம் உண்டாகும். திருமணம் கை கூடும். சுயநலமாக எந்த விஷயத்தையும் முடிவு செய்யவேண்டாம். 7-மிடத்தில் குரு வக்கிர நிலையில் இருப்பது உங்களுக்கு தாராள குணத்தைக் கொடுத்து, உடன் இருப்பவருக்கும் உதவி, நீங்களும் பயனடைவீர்கள். உங்கள் தேவைகளையும் உங்கள் பார்ட்னரின் தேவைகளையும் சீர்தூக்கி காரியமாற்றி, பலன் பெறுவீர்கள். இந்தக் குருவின் வக்கிரம் நற்பலன்களைக் கொடுக்கும். துன்பங்கள் அனைத்தும் விலகும். உங்கள் பலம் கூடும். சுறுசுறுப்பாக செயலாற்றுவீர்கள்.
பரிகாரம்:
வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் நிற மலர் மாலையும் கொண்டு வழிபடுவது நல்லது. சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று, எள்தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் விலகும். பிரதோஷ காலங்களில் சிவன் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபட்டால் ,தீய பலன்கள் வெகுவாகக் குறையும்.
வாழ்க வளமுடன்!
################
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)