தேங்காய்ப் பால் தக்காளி சாதம்- செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி- ½ கப்; பச்சரிசி-2 கப்; தேங்காய்ப் பால்- 2 கப்; வெங்காயம்-1; தக்காளி- 6; பச்சை மிளகாய்-2; மிளகாய்த் தூள்- 1 டீ ஸ்பூன்; மஞ்சள் தூள்- ¼, உப்பு- தேவைக்கு; கடுகு, ஜீரகம் தலா- அரை ஸ்பூன்; நெய்-2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
அரிசியை சுத்தம் செய்து அத்துடன் தேங்காய்ப் பால், 3 கப் தண்ணீர், உப்பு ஆல்கியவற்றை சேர்த்து உதிராக வேக வையுங்கள். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். கடாயை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி சூடானதும், கடுகு ஜீரகம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து, பட்டாணி வேகும் வரை கிளறி இறக்குங்கள். சாதத்தில் தக்காளி கலவையை சேர்த்துக் கலக்குங்கள். பிள்பில்லாத தக்காளி என்றால், 1 மூடி எலுமிச்சை சாறு சேர்க்கலாம். சூப்பரான தேங்காய்ப் பால் தக்காளி சாதம் ரெடி.
_________________
Feb 172022