நச்சை நீக்கும் எலுமிச்சை சாறு:
உடல் எடை குறைய முதல் படி உடம்பில் உள்ள நச்சுத் தன்மை முழுதும் வெளியேறுவதுதான். சாப்பிடும் உணவு, சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், சோப்பு, கிரீம், பற்பசை அழகு சாதனப் பொருட்கள் என்று அனைத்திலும் பெட்ரோலியப் பொருட்கள், உலோகங்கள் கலந்து உள்ளன.
நச்சு நம் உடம்பின் அமிலத் தன்மையை அதிகரிக்கக்கூடியது. மாசு கலந்த சுற்றுச் சூழல் புற்றுநோய், ‘ஆட்டிசம்’ என்று பிறவி உடல் கோளாறுகள் மரபியல் நோய்களை உண்டாக்கக்கூடியது.
உடம்பில் உள்ள நச்சு முழுவதும் வெளியேறாவிட்டால், கொழுப்பை குறைப்பது சிரமம்.
காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால், கல்லீரலில் உள்ள நச்சுத் தன்மை நீங்கும்.
எலுமிச்சை கலந்த நீரைக் குடிக்கும்போது முதல் சில நாட்கள் வாந்தி வரும் உணர்வு, லேசான மயக்கம், தலைச் சுற்றல் போன்றவை வரலாம். உடம்பில் தங்கிய நச்சு சிறிது சிறிதாக வெளியேறலாம். இது சரியாகிவிடும்.
************************
Mar 092022