நோய் எதிர்ப்பு தரும் திப்பிலி:
1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது திப்பிலி.
2. மேலும் இதில் தயாரிக்கப்படும் மருந்து ஆஸ்துமா, மூக்கடைப்பு, சைனஸ், தலைவலிக்கு சிறந்தது.
3. உடலில் ஏற்படும் தசைவலி, வயிற்றுப் போக்கு, தொழு நோய், முக்கியமாக இருமல், கபம், சுவாசக் குழாய் அடைப்பு, மார்புச் சளி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
4. திப்பிலிப்பொடி மற்றும் கடுக்காய்ப் பொடி சம அளவு எடுத்து தேன் விட்டுக் குழைத்து, அரை தேக்கரண்டி அளவு தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால், இளைப்பு நோய் நீங்கும்.
5. உடல் வலி, முதுகு வலி மற்றும் வாத நோய்களுக்கு கண்டந்திப்பிலி 5 கிராம் எடுத்து, அரைத்து பாலில் கலந்து குடிக்க வேண்டும்.
6. திப்பிலிப் பொடி 10 கிராம் எடுத்து, அரை லிட்டர் பசும்பால் விட்டுக் காய்ச்சி, இருவேளை குடித்துவர இருமல் மற்றும் வாயுப் பிரச்சினைகள் குணமாகும்.
7. தூள் செய்த அரை தேக்கரண்டி திப்பிலியில் தேன் கலந்து இரு வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வர தேமல் குணமாகும்.
8. மூட்டுவலிக்கு 2 கிராம் திப்பிலிப் பொடியை 100மி.லி பாலில் கலந்து 30 நாட்கள் தினமும் பருகினால், நல்ல பலன் கிடைக்கும்.
9. திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து வறுத்து பொடியாக்கி தேனுடன் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க் கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.
**********************************
Apr 192022