வாயுத் தொல்லை ஏற்பட முக்கிய காரணங்களும் தீர்வுகளும்:
செரிமானத்தில் கோளாறு உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது , காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையைத் தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது ஆகியவைதான் வாயுத் தொல்லைக்கு முக்கிய காரணம்.
சில நேரங்களில் வாயுத் தொல்லை தர்ம சங்கடமான சூழலை உருவாக்கிவிடும். வெளியேறும் வாயுவில் நாற்றம் இல்லாதவரை நம் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நாற்றம் இருந்தால் அதை சரிசெய்ய வேண்டியது அவசியம்.
வாயு உருவாகும் சமயங்களில் ஒரு துண்டு பப்பாளியை வாயில் போட்டுக்கொள்ளுங்கள். இது வாயுவை சமன் செய்கிறது. ஜீரண அமிலங்களை முறையாகத் தூண்டுவதால், வாயு தடுக்கப்படுகிறது.
மசாலாப் பொருட்களான ஜீரகம், ஏலக்காய், சோம்பு போன்றவை மிகச் சிறந்த நிவாரணிகளாகும். வாயுத் தொல்லை ஏற்பட்டவுடன், இவைகளை வெறும் வாயில் மென்றால், உடனே நல்ல பலன் கிடைக்கும்.
அமில உற்பத்தியைத் தடுக்கிறது புதினா. வாயுவால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெயை வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
தேங்காய்த் துருவலை சாப்பிடலாம். தேங்காய் நீர் அல்லது தேங்காய்ப் பாலைக் குடிப்பதால், வாயுத் தொல்லை குறைகிறது. மேலும் இவை அமில உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது.
சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால், வாயுத் தொல்லை நீங்கும்.
****************************
.